பாத்ரூமில் ஒளிந்திருந்து செல்போன்கள் ஆட்டைய போட்ட விநோத இளைஞர்!! காதலிக்காக அலப்பறை!!

 
முனாப்

பெங்களூரைச் சேர்ந்த 27 வயதான அப்துல் முனார்ப் என்ற இளைஞர் ஒரு பெண்ணை மிகவும் தீவிரமாக காதலித்துள்ளார். காதலிக்கு பிறந்தநாள் வர இருப்பதால் அவருக்கு மிகவும் விலை உயர்ந்த செல்போனை பரிசாக தர வேண்டும் என்று ஆசைப்பட்டு இருக்கிறார். இதற்காக ஜேடிபி நகரில் இயங்கி வரும் ஒரு மிகப்பெரிய செல்போனை குறிவைத்து அதற்குள் இரவு நேரத்தில் நுழைந்தார். கடை மூடும் நேரம் என்பதால் இளைஞர் அங்கிருந்த பாத்ரூமில் ஒளிந்து கொண்டார். இதை அறிந்திராத ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு சென்றனர்.

முனாப்
இதை உறுதி செய்த இளைஞர் பாத்ரூமில் இருந்து வெளியே வந்த அங்கு வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த 7 செல்போன்களை எடுத்து ஒளித்து வைத்துக் கொண்டு மீண்டும் பாத்ரூமுக்குள் தஞ்சம் அடைந்துள்ளார். வழக்கம் போல கடை ஊழியர் காலையில் கடையை திறந்த போது. அங்கிருந்து தப்பித்து அப்துல் கடையை ªவிட்டு நைசாக வெளியேறினார்.

கடையில் பொருட்கள கலைந்து இருந்ததாலும், ஒரு செல்போன் தரையில் விழுந்து இருந்ததாலும், சந்தேகமடைந்த ஊழியர்கள், மேலும் சில செல்போன்கள் காணாமல் போனது குறித்து அறிந்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக விரைந்து சென்ற போலீசார் காணாமல் போன செல்போன்களில் இஎம்இஐ நம்பரை வைத்து அப்துல் முனாப்பை சுற்றி வளைத்து பிடித்தனர்.

சிறை
அவரை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் பிடிஎம் லே அவுட் பகுதியில் ஒரு ரெஸ்டாரண்டில் வேலை செய்து வருவது தெரிய வந்தது. மேலும் இன்ஸ்டாகிராமில் பழக்கமாகிய பெண் காதலியாக மாறினார். கையில் காசு இல்லாததால் அவருக்கு பரிசு தருவதற்காக செல்போன் கடையில் கொள்ளையடித்தேன் என்று  ஒப்புக் கொண்டார்.

தான் கொள்ளைடியத்த 7 செல்போன்களில் 6 செல்போனை காதலிக்கு பரிசளித்துவிட்டு ஒன்றை மட்டும் தான் பயன்படுத்தியபோதுதான் போலீசிடம் வசமாக சிக்கியுள்ளார். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.5 லட்சம் என்று கூறப்படுகிறது. தற்போது முனாப் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். காதலிக்கு சொந்த செலவில் பரிசு வாங்காமல் கடையில் அபேஸ் செய்ததால் தற்போது சிறைக் கம்பிகளை எண்ணிக் கொண்டு இருக்கிறார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web