மாணவனின் விபரீத செயல்… தனியார் கல்லூரி பேருந்தை ஓட்டிச் சென்று சாகசம்…

 
பேருந்து

சேலம் அருகே தனியார் கல்லூரி பேருந்தை, அரசு பள்ளி சீருடையுடன் மாணவன் ஒருவர் இயக்கிய  சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சேலம்   மாவட்டம் எடப்பாடி அடுத்த ஜலகண்டாபுரம் அருகில் உள்ள பக்கநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் . இவர் ஓமலூரில் உள்ள தனியார்   கல்லூரியில் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார்.

பேருந்து

இதனிடையே கடந்த செப்டம்பர் 14-ம் தேதி அந்த பேருந்து பழுது ஏற்பட்டதால், அதே நிர்வாகத்திற்கு சொந்தமாக சேலம் அம்மாபேட்டையில் இயங்கி வரும் மகளிர் கல்லூரி பேருந்தை சந்திரசேகர் எடுத்து சென்றுள்ளார். மாணவர்கள் அனைவரையும் இறக்கிவிட்ட பிறகு, வழக்கம் போல் அவரது இல்லத்திற்கு பேருந்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரது அண்ணன் மகன் குணா என்ற பிளஸ் டூ மாணவன் சிறிது தூரம் பேருந்தை தான் ஓட்டுவதாக கூறியுள்ளார். மாணவனின் இந்த விபரீத செயலுக்கு சந்திரசேகரும் துணை போயுள்ளார்.

பேருந்து

இதனைத்தொடர்ந்து மாணவன் பேருந்தை சிறிது தூரம் இயக்கியுள்ளார். இதுத்தொடர்பான வீடியோ சமூக வளைதளங்களில் பரவி வந்தது.  போக்குவரத்து விதிகளை மீறி  18 வயதுக்கு குறைவான ஒருவர் பேருந்தை  இயக்கிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதுத்தொடர்பாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

From around the web