உதவி மின்பொறியாளர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து! கோப்புகள் எரிந்து நாசம்!

 
தீவிபத்து

சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள உதவி மின்பொறியாளர் அலுவலகத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

சென்னை அண்ணாசாலை தர்கா அருகே உதவி மின் பொறியாளர் அலுவலகம் மற்றும் துணை மின் நிலையம் இயங்கி வருகிறது. இன்று காலை 6 மணியளவில் இங்கு திடர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 10க்கும் மேற்பட்ட கணினிகள் எரிந்து நாசமானது. மேலும் மின் நுகர்வோர்களின் தகவல்களும் தீக்கிரையானது.

தீ விபத்து

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு 5க்கும் மேற்பட் தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக துணை மின் நிலையத்தில் தீவிபத்து ஏற்படாததால், அதன் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளுக்கு மின்தடை ஏற்படவில்லை.

தீயணைப்பு வாகனம் தீ நெருப்பு
பின்னர் இந்த திடீர் தீ விபத்து குறித்து மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி கூறும் போது, ‘‘தீ விபத்து காரணமாக மின்சார வாரிய ஊழியர்களுக்கு எந்த காயமோ உயிர் சேதமோ நிகழவில்லை. திடீர் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என்று கூறினார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web