பிரபல பாலிவுட் நடிகை கொலை வழக்கில் திடீர் திருப்பம்!! மகனே அடித்துக் கொன்றது அம்பலம்!!

 
வீனா கபூர்

பிரபல  பாலிவுட் நடிகையாக வலம் வந்த வீணா கபூர் கொலை வழக்கில் சொத்து தகராறு காரணமாக அவரது மகன் சச்சின் கபூரே தாயை பேஸ்பால் பேட்டால் அடித்துக் கொடூரமாக கொலை செய்த   சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பாலிவுட்டில் பபடங்களிலும், டிவி தொடர்களிலும் நடித்து பிரபலமாக இருந்தவர் வீணா கபூர். வயது 74.   அமெரிக்காவில் வசிக்கும் இவரது மூத்த மகன் கடந்த செவ்வாய்கிழமை அன்று வீணா கபூருக்கு பலமுறை போன் செய்துள்ளார்.

வீனா கபூர்

ஆனால் யாருமே போனை எடுக்கவில்லை. இதையடுத்து உறவினருக்கு போன் செய்த அவர், உடனே விட்டிற்கு சென்று பார்க்கும்படி கூறினார். இதனை அடுத்து உறவினர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, அங்கு வீணா கபூர் இல்லை. இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மும்பையில் வசித்து வரும் வீணா கபூரின் இளைய மகன் சச்சினிடம் போலீசார் அவரது தாய் குறித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் அவரிடம் போலிசார்   விசாரணையை   தீவிரப்படுத்தினர். அப்போது, சச்சின் தனது தாயை சொத்துக்காக கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.  இதுத்தொடர்பாக அவர் அளித்த வாக்குமூலத்தில், தனது தாய் வீணா கபூருக்கு மும்பையில் 12 கோடி ரூபாய் மதிப்பில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. அதை தனது பெயருக்கு மாற்றிக் கொடுக்கும்படி   கேட்டதாகவும்.

வீனா கபூர்

இதற்கு தாய் வீணா கபூர் மறுத்ததாக தெரிகிறது. இது தொடர்பாக   கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதால்   ஆத்திரத்தில் தாய் வீனா கபூரை பேஸ்பால் பேட்டால் தலையில் அடித்து கொலை செய்து விட்டு  பின்னர் வீட்டில் வேலை செய்த நபரின் உதவியுடன் காரில் அவரது உடலை எடுத்து காட்டில் வீசியுள்ளது தெரியவந்துள்ளது.  இதையடுத்து சச்சின் மற்றும் வீட்டு வேலைக்காரர் சோட்டு மண்டல் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். பிரபல இந்தி நடிகை வீணா கபூர் தனது சொந்த மகனால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் திரையுலகில் மட்டுமல்ல ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web