சென்னை வெளிவட்ட சாலையில் கோர விபத்து! அதிமுக பிரமுகர்கள் உட்பட 3 பேர் பலி!

 
கார் விபத்து

சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற சொகுசு கார், மாங்காடு அடுத்த மலையம்பாக்கம் அருகே வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் அதிவேகமாக சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது கார் பள்ளத்தில் விழுந்து, அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேரில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இரண்டு பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காரில் பயணம் செய்த கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் ரமேஷ் பாபு, அவரது சகோதரர் சுரேஷ் பாபு மற்றும் சுதாகர் ஆகியோர் உயிரிழந்தனர்.

விபத்து

விபத்தில் படுகாயமடைந்த வெங்கடேசன், ராஜவேலு ஆகியோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில், வேடந்தாங்கலைச் சேர்ந்த ரமேஷ் பாபு, சுரேஷ் பாபு இருவரும் சகோதரர்கள். இவர்களுக்கு சொந்தமான ஜேசிபி மற்றும் பொக்லைன் இயந்திரங்கள் வேடந்தாங்கலில் இயங்கி வருகிறது. வாகனங்களை பழுது நீக்க சென்னையிலிருந்து மெக்கானிக்கை அழைத்துச் சென்றபோது விபத்து நேர்ந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.

விபத்து

வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை பகுதியில் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்து நடக்கிறது. இதனால் இந்த பகுதியில் தடுப்புச் சுவர் கட்ட வேண்டும், விபத்து கவன குறியீடுகள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web