பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து!! 5 பேர் பலி!! 10 பேர் கவலைக்கிடம்!!

 
வெடி விபத்து

மதுரை மாவட்டம் திருமங்கலத்தின்  அருகே அமைந்துள்ளது  அழகுசிறை கிராமம். இங்கு தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது.  இந்த ஆலையில், சுற்றுவட்டார கிராமங்களில் வசிப்பவர்கள் பணிபுரிந்து வந்தனர். இந்த பட்டாசு ஆலையில்  கோயில் திருவிழாக்கள் மற்றும் இல்ல நிகழ்ச்சிகளின்போது பயன்படுத்துவதற்கான அதிக சத்தத்துடன் வெடிக்கும் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

வெடி விபத்து

வழக்கம் போல் இன்றும் 15க்கும் மேற்பட்டவர்கள் பட்டாசு ஆலையில் பணிபுரிந்து வந்தனர்.இந்நிலையில், பட்டாசு ஆலையில் திடீர் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அந்த கட்டடம் முழுவதும் சிதறி தரைமட்டமானது. இந்த விபத்தில் வடக்கன்பட்டி பகுதியில் வசித்து வரும்  5 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும்  சம்பவ இடத்திற்கு விரைந்து  வந்த தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

போலீஸ்

மேலும்  படுகாயமடைந்தவர்களை மீட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து   வழக்குப் பதிவு செய்யப்பட்டு  தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. . பட்டாசு ஆலையின் 2 வெடி மருந்து கிடங்குகளில் இருந்த பணியாளர்கள் 5 பேரும் விபத்தில் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. இந்த விபத்தில் வடக்கன்பட்டியை சேர்ந்த வல்லரசு, கோபி, விக்கி, பிரேமா உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக வருவாய் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web