இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை .! 2 ஆயிரம் பேர் பாதுகாப்பாக வெளியேற்றம்!!

 
எரிமலை

இந்தோனேசியா நாடு சுனாமி, நிலநடுக்கம் போன்ற பல்வேறு பேரிடர்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் இந்தோனேசியாவில் உள்ள எரிமலை வெடித்து சிதறியதால் அங்கிருந்த மக்கள் பாதுக்காப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள லுமாஜாங் நகரில் அந்நாட்டின் மிகப்பெரிய எரிமலையான செமேரு உள்ளது. சுமார் 12 ஆயிரம் அடி உயரம் கொண்ட செமேரு எரிமலை திடீரென்று வெடித்து சிதறியது.

வெடித்து சிதறிய எரிமலை! ஆறாக ஓடும் லாவா !  அழிந்த கிராமங்கள் !

கன மழை காரணமாக செமேரு எரிமலையின் குவி மாடம் சரிந்தது. இதனால் எரிமலையில் நெருப்பு குழும்பு வெளியேற தொடங்கியது. எரிமலையில் இருந்து சாம்பல் புகை மற்றும் நெருப்பு குழம்பு வெளியாகி வருகிறது. 5 ஆயிரம் அடி உயரத்துக்கு சாம்பல் புகை மேலே எழும்பியுள்ளது.   மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சும்பர்வுலு, சுபிது ராங் கிராமங்களில் மீட்பு குழுவினர் விரைந்து சென்றனர். அங்கு வீடுகள் மற்றும் கட்டிடங்கள் மேலே எரிமலை குப்பைகள் கிடந்தன. எரிமலை வெடிப்பு காரணமாக 2 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்று தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.  

வெடித்து சிதறிய எரிமலை! ஆறாக ஓடும் லாவா !  அழிந்த கிராமங்கள் !

எரிமலை வெடிப்பால் சாம்பல் புகை மற்றும் நெருப்பு குழம்பு வெளியேற்றத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். இன்றும் எரிமலையின் ஆக்ரோஷம் அதிகரித்து இருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் செமேரு எரிமலை வெடித்து சிதறியதில் 51 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web