கிரிக்கெட் டிக்கெட் வாங்க குவிந்த கூட்டத் தில் சிக்கி பெண் ஒருவர் பலி!!

 
டிக்கெட் வாங்க கூட்டம்

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான மூன்று போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் மொகாலியில் நடந்த முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.இந்த   நிலையில்இந்தியா   ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2 வது போட்டி நாளை  நாக்பூரில்  நடைபெறவுள்ளது

மேலும் 3வது போட்டி வருகிற 25ம் தேதி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில்  நடைபெறவுள்ளது. இதற்கான டிக்கெட்  தற்போது விற்பனை செய்யப்பட்டது. இதனை வாங்க ஜிம்கானா மைதானத்தில் ரசிகர்கள் முன்டியடித்தபடி குவிந்தனர்இந்த கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து  கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் ரசிகர்களை லேசான தடியடி நடத்தி  கலைத்தனர். இந்நிலையில் கூட்ட நெரிசல் மற்றும் தடியடியில் 4 பேர் காயமடைந்தனர்.

எனவே முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். நாளைய ஆட்டத்துக்கான இந்திய அணியில் பந்து வீச்சில் மாற்றம் செய்யப்படும். கடந்த ஆட்டத்தில் வேகப்பந்தில் உமேஷ் யாதவும், சுழற்பந்தில் அக்ஷர் படேலும் சிறப்பாக செயல்பட்டனர். புவனேஷ்குமார், ஹர்சல் படேல், யுசுவேந்திர சாஹல் ஆகியோர் ரன்களை அள்ளிக் கொடுத்து மோசமாக வீசினார்கள். தீபக் சாஹர், அஸ்வின் ஆகியோர் வாய்ப்பு நிலைக்காக காத்திருக்கிறார்கள்.

From around the web