தண்ணீர் ட்ரம்மில் அழுகிய நிலையில் பெண் சடலம்!! தலைமறைவான கணவர்!!

 
தண்ணீர் ட்ரம்மில் அழுகிய நிலையில் பெண் சடலம்

தண்ணீர் ட்ரம்மில் பெண் ஒருவரது உடல் அழுகிய நிலையில் ஓராண்டாய் கிடந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அடுத்த மதுரவாடாவில் உள்ள நபர் ஒருவர் தனது வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார். அந்த வீட்டில் குடியிருந்த நபர் கடந்த ஓராண்டாக வாடகை கொடுக்காமல் இருந்ததாக   தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த வீட்டின் உரிமையாளர், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று வாடகைக்குக் குடியிருக்கும் நபரின் பொருட்களை வெளியே தூக்கி வீச முடிவு செய்துள்ளார்.

தண்ணீர் ட்ரம்

அதன்படி கதவை உடைத்து   வீட்டின் உள்ளே சென்ற உரிமையாளர் அங்கிருந்த தண்ணீர் ட்ரம் ஒன்றை அகற்ற முயற்சித்துள்ளார். அப்போது அதில் ஒரு பெண்ணின் உடல் பாகங்கள் அழுகிய நிலையில் கிடந்துள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தார் வீட்டின் உரிமையாளர்.  பின்னர் இதுகுறித்து   காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை, பெண்ணின் உடல் பாகங்களை மீட்டு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

பலி

மேலும் இதுத்தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலிசார் அந்த உடல் பாகங்கள் யாருடையது? அந்த வீட்டிலிருந்தவர் யார்? தற்போது அவர் எங்கிருக்கிறார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

From around the web