கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளம்பெண்!! தட்டி தூக்கிய காவல்துறை!!

 
கஞ்சா

இளைஞர்களின் வாழ்க்கையை சீர்குலைக்கும் கஞ்சா உட்பட  போதைப் பொருட்களின் விற்பனையை மத்திய, மாநில அரசுகள் இரும்புக்கரம் கொண்டு அடக்கி வருகிறது. அப்படிப்பட்ட தேடுதல் வேட்டைகளில் கிலோ கணக்கில் போதைப் பொருட்கள் பிடுபடுகிறது. மாவட்டம், மாநிலம் என பல்வேறு இடங்களில் கைமாற்றலாகும் போதைப் பொருட்கள் ரயில் மற்றும் பேருந்துகளில் பிடிபடுவதும் நடந்து வருகிறது.

கஞ்சா சாக்லெட்டுகள்

இந்நிலையில் சென்னை குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில் ஒருவர் கஞ்சா புகைத்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் மதுவிலக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரேம்குமார் என்பவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர், பல்லாவரத்தைச் சேர்ந்தவர் என்றும், அவருக்கு கஞ்சாவை அமைந்தகரை பகுதியில் வசித்து வரும் ஷானு என்ற பெண்ணிடம் பெற்றதாகவும் கூறினார்.

இதனை ஷானு என்ற பெண்ணை போலீசார் தேடிபிடித்து கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் திரிபுராவைச் சேர்ந்த வட மாநில பெண் என்பது தெரியவந்தது. பின்னர் அவரிடம் இருந்து 5 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 

போலீஸ்

பின்னர் கைது செய்யப்பட்ட ஷானு குரோம்பேட்டை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து குரோம்பேட்டை போலீசார் ஷானு மீது வழக்குப்பதிவு செய்து தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.வடமாநில பெண் சென்னையில் 5 கிலோ கஞ்சா பொட்டலங்களுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web