திருமணமான சிஷ்யையுடன் ஓட்டம் பிடித்த மடாதிபதி!! பகீர்!!

 
மடாதிபதி

கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டத்தின் மாகடி பகுதியில் சோலுாரின் கத்துகே மடம் உள்ளது. இந்த மடத்தின் மடாதிபதியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன், சிவானந்த சுவாமிகள் (25) நியமிக்கப்பட்டார். இதற்கு முன் இவருக்கு, திருமணமான பெண்ணுடன் காதல் ஏற்பட்டது. அவருடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

பள்ளி காதல்

இந் நிலையில், நேற்று காலை மடாதிபதி சிவானந்த சுவாமிகள், கடிதம் எழுதி வைத்து விட்டு, மடத்தில் இருந்து அந்த பெண்ணுடன் ஓடிவிட்டார். பெண் காணாமல் போனது குறித்து, தாவரகரே காவல் நிலையத்தில் புகார் பதிவாகியுள்ளது. ஆனால் மடாதிபதி காணாமல் போனது குறித்து, புகார் பதிவானது பற்றி தெரியவில்லை.

அவர் எழுதி வைத்த கடிதத்தில், நான் என் சன்னியாச வாழ்க்கையை விட்டு விலகுகிறேன். ஏனென்றால் என் வாழ்க்கையில் நிம்மதி இல்லை. எனவே இதை விட்டு வெளியேறுகிறேன்; என் வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டுள்ளது. அதற்கான காரணம், உங்களுக்கு தெரியும் என நினைக்கிறேன். என்னை தேட முயற்சிக்க வேண்டாம்.

காதல்

முயற்சித்தால் என் பிணத்தைத்தான் பார்ப்பீர்கள். நான் கழற்றிய காவி உடையை, இனி எப்போதும் அணியமாட்டேன். என் வழியில் செல்ல விட்டு விடுங்கள். எங்கோ நான் நிம்மதியாக இருப்பேன். என்னை மீண்டும் இந்த வாழ்க்கைக்கு இழுத்து வராதீர்கள். இழுத்து வந்தால் என் இறப்பை பார்க்க வேண்டி வரும். என்னை அனைவரும் மன்னித்து மறந்து விடுங்கள் என்று கூறப்பட்டுள்ளது.சோலுார் கத்துகே மடத்தின் மடாதிபதி, கடிதம் எழுதி வைத்து விட்டு, திருமணமான பெண்ணுடன் தப்பியோடி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web