2 ஆண்டுகளாக தலைமறைவு!! தண்ணி காட்டிய குற்றவாளியை தட்டித் தூக்கிய போலீஸ்!!

 
மார்த்தாண்டம்


சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த கைதி தலைமறைவானதைத் தொடர்ந்து போலீசார் நள்ளிரவில் கைது செய்த சம்பவம் மார்த்தாண்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட காஞ்சிரகோடு, பெருதிம்புழி பறம்புவிளை என்ற பகுதியில் வசித்து வருபவர் மது (வயது 42). போலீஸ் நிலையத்தில் இவர் மீது அடிதடி புகார் கூறப்பட்டது. 

போலீஸ்

இதைத்தொடர்ந்து போலீசார் மதுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் கடந்த 2020ம் ஆண்டு மது ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்து கோர்ட்டில் ஆஜராகி கொண்டு இருந்தார். இதற்கிடையில் அவர் திடீரென்று தலைமறைவானதால் போலீசாருக்கு பெரும் பிரச்சினை எழுந்தது.

இதைத்தொடர்ந்து தலைமறைவான மதுவை பிடிக்க குழித்துறை கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. அதன்பேரில் போலீசார் மதுவை தீவிரமாக தேடி வந்தனர். ஆனால் அவர் பதுங்கி இருக்கும் இடம் குறித்து யாரும் தெரியவில்லை. 

சிறை
2 ஆண்டுகள் தொடர்ந்து போலீசுக்கு டிமிக்கி கொடுத்து வந்த மது நேற்று நள்ளிரவில் அவரது வீட்டிற்கு வந்துள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அவரது வீட்டிற்கு வரைந்து சென்று அதிரடியாக கைது செய்தனர். 2 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீசார் அதிரடியாக நள்ளிரவு நேரத்தில் வீடு புகுந்து கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web