சாதித்த இந்திய மகளிர் இளம் படை.. ரூ. 5 கோடி அள்ளி கொடுத்த பிசிசிஐ !!

 
India
19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் முதல் முறையாக இந்த நாட்டில் நடைபெற்றது. இந்த போட்டி கடந்த 14ஆம் தேதி தென்ஆப்பிரிக்காவில் தொடங்கியது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் இந்தியாவும், இங்கிலாந்தும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. 
 இறுதிஆட்டம் போட்செப்ஸ்ட்ரூமில் நேற்று நடந்தது.
India
இதில் 'டாஸ்' ஜெயித்த இந்திய கேப்டன் ஷபாலி வர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து வீராங்கனைகள் தொடக்கம் முதலே தடுமாறினர். இந்திய வீராங்கனைகளின் மிரட்டலான பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். 17.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த அந்த அணி 68 ரன்னில் சுருண்டது.
 கேப்டன் கிரேஸ் ஸ்கிரிவென்ஸ் 4 ரன்னில் கேட்ச் ஆனார். இந்தியா தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் திதாஸ் சாது 4 ஓவர்களில் 6 ரன் மட்டுமே வழங்கி 2 விக்கெட் சாய்த்தார். பார்ஷவி சோப்ரா, அர்ச்சனா தேவி தலா 2 விக்கெட்டும், மன்னட் காஷ்யப், ஷபாலி வர்மா, சோனம் யாதவ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்தியா
இதனை அடுத்து எளிய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியில் தொடக்க வீராங்கனைகள் கேப்டன் ஷபாலி வர்மா (15 ரன்), சுவேதா செராவத் (5 ரன்) விரைவில் ஆட்டம் இழந்தனர். எனினும் பின்னால் வந்த வீராங்கனைகள் சிரமமின்றி இலக்கை எட்ட வைத்தனர். திரிஷா 24 ரன்னில் போல்டானார். இந்திய அணி 14 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 69 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று உலகக் கோப்பையை உச்சிமுகர்ந்தது. இந்தியாவின் திதாஸ் சாது ஆட்டநாயகி விருதையும், இங்கிலாந்து கேப்டன் கிரேஸ் ஸ்கிரிவென்ஸ் தொடர்நாயகி விருதையும் (மொத்தம் 293 ரன் மற்றும் 9 விக்கெட்) பெற்றனர்.
India
பெண்கள் கிரிக்கெட்டில் இதற்கு முன்பு எந்த வடிவிலான உலகக் கோப்பைபையும் இந்தியா வென்றதில்லை. இந்திய சீனியர் அணி 3 முறை இறுதி ஆட்டத்தில் தோற்று இருக்கிறது. ஆனால் இந்திய இளம் படை, அறிமுக உலகக் கோப்பை தொடரிலேயே பட்டம் வென்று சாதித்துள்ளது.
 இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா, ஒட்டுமொத்த வீராங்கனைகள் மற்றும் உதவியாளர்களுக்கு ரூ.5 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்படும் என்றும் அறிவித்தார். 
From around the web