பள்ளி மாணவி மீது ஆசிட் வீச்சு!! பட்டப்பகலில் நடந்த கொடூரம்!! வெளியான சிசிடிவி காட்சி!!
தலைநகர் டெல்லியில் பட்டப்பகலில் பள்ளி சிறுமியின் முகத்தில் ஆசிட் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் துவாரகா மாவட்டத்தில் இன்று காலை 9 மணியளவில் 17 வயது பள்ளி மாணவி ஒருவர் பள்ளிக்கு சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் அந்த சிறுமியின் முகத்தில் திடீரென ஆசிட்டை வீசி விட்டு வேகமாக சென்றுள்ளனர்.
இதில், அந்த சிறுமி வலியால் துடித்தார். இதுகுறித்து அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆபத்தான நிலையில் அந்த சிறுமிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
दिल्ली में एसिड अटैक का मामला
— Arun Gangwar (@AG_Journalist) December 14, 2022
Acid Attack in #Delhi- a girl aged 17 years was allegedly attacked using some acid like substance by two persons on a bike around 7:30am this morning.#acidattack pic.twitter.com/HZXTiHMsXH
மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலிசார் ஆய்வு செய்தனர். அதில் இருசக்கர வாகனத்தில் வரும் மர்ம நபர்கள் இருவர் மாணவி மீது ஆசிட் வீசிவிட்டு செல்கின்றனர். இதனைத்தொடர்ந்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மற்றொருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.