அதிரடி!! கோவையில் அழகு நிலைய ஊழியரை வெட்டி கொலை செய்த மூவர் கைது.

கோவையில்  அழகு  நிலைய  ஊழியரை 12 துண்டுகளாக  வெட்டி  கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பெண் உட்பட மூன்று பேரை காவல்துறையினர்  கைது  செய்தனர்.

 
3 பேர் கைது

கோயம்புத்தூர் துடியலூர் அருகே வெள்ளக்கிணர் பிரிவு பகுதியில் உள்ள குப்பை தொட்டியில் துண்டிக்கப்பட்ட கை ஒன்று   கவரில் வைத்து வீசப்பட்டுள்ளதாக துப்புரவு பணியாளர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்ட கையை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அந்த கைகள், கோவை சரவணம்பட்டியில் தங்கியிருந்து காந்திபுரம் அழகு நிலையத்தில் வேலைபார்த்து வந்த ஈரோடு, மாவட்டம் சூரம்பட்டியை சேர்ந்த பிரபு என்பவருடையது விசாரணையில்  தெரியவந்தது. 

இதனைத்தொடர்ந்து பிரபுவின் செல்போன் தொடர்புகளை ஆய்வு செய்ததில் அவருடன் கடைசியாக பேசிய கவிதா என்பவரை பிடித்து காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பிரபு முதல் மனைவியை பிரிந்து 2 வது மனைவியுடன் ஈரோட்டில் வசித்து வந்ததும்,  பிரபுவுக்கும், சரவணம்பட்டியை சேர்ந்த கவிதாவுக்கும் தொடர்பு ஏற்பட்டதும் தெரியவந்தது.   இதனிடையே   கவிதாவுடன் பிரபு தனிமையில் இருந்ததை வீடியோ எடுத்து வைத்துக் கொண்ட   கவிதாவை அடிக்கடி மிரட்டி பணம் பறித்து வந்துள்ளதாகவும்,  இதனால் மன உளைச்சலில் இருந்த கவிதா இது குறித்து   தனது தற்போதைய காதலர்களான அமுல்திவாகர் மற்றும் கார்த்திக்கிடம் தெரிவித்துள்ளதாகவும், அவர்கள் பிரபுவை வீட்டிற்கு வரவழைத்து கொலை செய்துள்ளார்.

பின்னர் அவரது உடலை மரம் அறுக்கும் இயந்திரத்தை கொண்டு   துண்டாக வெட்டி பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து மூன்று இடங்களில் வீசியதும் காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து தீயணைப்புத் துறையினர் உதவியுடன் துடியலூர் அருகே உள்ள கிணற்றில் இருந்து பிளாஸ்டிக் கவரில் தனி தனியாக அடைத்து வீசப்பட்டிருந்த பிரபின் தலை மற்றும் உடல் பாகங்களை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்     கவிதா, அமுல்திவாகர், கார்த்திக் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர்  கைது செய்து சிறையில் அடைத்தனர்.

From around the web