அதிரடி ஆபர்!! ரூ1க்கு ஒரு புடவை!! அதிகாலை முதலே குவியத் தொடங்கிய பெண்கள் கூட்டம்!!

 
பெண்கள்

ஜவுளிக் கடைகளில் பொதுவாக புத்தாண்டு, தீபாவளி, ஆடி, பொங்கல், பண்டிகை காலங்களில் தள்ளுபடி விலையில் புடவை, ஜவுளிகளை விற்பனை செய்வதுண்டு. அதிலும் குறிப்பாக பெண்கள், குழந்தைகளை கவரும் வகையில் கவர்ச்சிகரமான அறிவிப்புக்களை வெளியிடுவர். இந்த அறிவிப்புக்கள் பெரும்பாலும் பெண்களை குறிவைத்தே வெளியிடப்படும். அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  கடந்த ஆண்டு நகரத்தில் மிக பிரம்மாண்டமாக ஒரு ஜவுளிக் கடை தொடங்கப்பட்டது.

பெண்கள்

ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி கவர்ச்சிகரமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இன்று செப்டம்பர் 10ம் தேதி கடைக்கு முதலில் ஜவுளி வாங்க வரும், 500 நபர்களுக்கு ஒரு ரூபாய்க்கு புடவை வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் ரூ10000க்கு மேல் ஜவுளிகள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு , கூடுதலாக ரூ1,000 ரூபாய் செலுத்தி ரூ5,000 மதிப்புள்ள டிராவலிங் பேக்கை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. 

கிருஷ்ணகிரி
அத்துடன் ரூ1,000க்கு ஜவுளிகள் வாங்குபவர்களுக்கு ரூ100ம், ரூ10000க்கு ஜவுளிகள் வாங்குபவர்களுக்கு ரூ1,000ம்,  ரூ100000க்கு மேல் வாங்குபவர்களுக்கு ரூ10000ம்  கேஷ் பேக் பெற்றுக் கொள்ளலாம். மேலும் 25 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு, ரேமண்ட் பேண்ட், சட்டை இலவசமாக வழங்கப்படுகிறது. ஆதரவு தந்து, முதல் ஆண்டு விழாவை எங்களுடன் கொண்டாடி, பரிசுகளை அள்ளிச் செல்லுங்கள் என அறிவிப்பு வெளியிட்டிருந்தது. முதலில் வரும் 500 பேருக்கு மட்டுமே கிடைக்கும் என கூறியதால் அங்கு அதிகாலை முதலே 1000க்கும் மேற்பட்ட பெண்கள் கூட்டம் குவியத் தொடங்கியது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web