அதிரடி சரவெடி!! ரேஷன் கடைகளில் அரிசி கடத்தலை தடுக்க கியூஆர்கோடு!!

 
ரேஷன் கடை

தமிழகத்தில்  ரேஷன்  அரசி கடத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதனை தடுக்கவும், கடத்தல்காரர்களை உடனுக்குடன் கண்டறிந்து தண்டிக்கவும் பல்வேறு பரிசீலணை கூட்டங்களை நடத்தி வருகிறது. தமிழகத்தில் ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் சீனி, பருப்பு, கோதுமை உட்பட  பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

ரேஷன்

இந்த கடத்தலுக்கு  ஒரு சில ரேஷன் கடைகளில் வேலை செய்யும் ஊழியர்களும் உடந்தையாக இருப்பதாக புகார்கள் எழுந்து வருகின்றன.  இதனை களையும் வகையில் தமிழக அரசு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட ரேசன் கடை பணியாளர்களை உடனுக்குடன் இடைநீக்கம் செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.  

ரேஷன்

தமிழகத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு  ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுப்பதற்காக ரேஷன் அரிசி மூட்டைகளில் கியூ ஆர் கோடு அச்சிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.  இதன் மூலமாக ரேஷன் அரிசி எந்த குடோனில் இருந்து கடத்தப்பட்டது என்பதை எளிதில் கண்டறியலாம். இதனால் குற்றவாளிகளை அடையாளம் கண்டுபிடித்து அவர்களை தண்டிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web