நடிகர் திலீப் நேரில் ஆஜராக உத்தரவு!! நீதிமன்றம் அதிரடி!!

 
திலீப்

பிரபல நடிகை காரில் கடத்தி செல்லப்பட்டது குறித்து தொடுக்கப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் மீது குற்றம்சாட்டப்பட்டது. தற்போது அவர் இந்த வழக்கில் 8வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.குற்றப்பிரிவு போலீசார் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் 112 பேரின் வாக்குமூலங்கள் மற்றும் 300க்கும் மேற்பட்ட கூடுதல் ஆதாரங்களை பதிவு செய்து மொத்தம் 1,000 பக்கங்கள் கொண்ட துணை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

திலீப்
இதற்கிடையில் நடிகர் திலீப்பும் அவரது நண்பரும் சரத்தும் விசாரணை அறிக்கையை நிராகரிக்கக்கோரி எர்ணாகுளம் முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். நீதிமன்றம் இந்த மனுவை விசாரணைக்கு பின்னர் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.  மேலும் நீதிமன்றம் போலீசாரின் தொடர் விசாரணை அறிக்கையை ஏற்றுக் கொண்டனர்.

சிறுமி வன்கொடுமை வழக்கில் ஒரேநாளில் நீதிமன்றம் தீர்ப்பு..!!

அத்துடன் நாளை மறுநாள்அக்டோபர்  31ம் தேதி அந்த குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யும்படி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி வழக்கு விசாரணையின் போது நடிகர் திலீப் மற்றும் அவரது நண்பர் சரத்தும் ஆஜராக வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web