நடிகர் ஜெயம் ரவிக்கு கொரோனா தொற்று உறுதி!

 
ஜெயம் ரவி

நடிகர் ஜெயம்ரவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, அவரது ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார். ஜாக்கிரதையாக இருங்க மக்களே.. மீண்டும் கொரோனா தொற்று பரவி வருகிறது. சமீபத்தில் வெளியாகி வசூல் சாதனை படைத்துக் கொண்டிருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நடித்துள்ள ஜெயம்ரவிக்கு தற்போது அதிகளவில் ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.


இந்நிலையில் நடிகர் ஜெயம்ரவி நேற்று இரவு ட்விட்டர் பக்கத்தில் அதிர்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றி, நான் உடனடியாக என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் தேவைப்படும் பட்சத்தில் தங்களைப் பரிசோதித்துக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். மேலும் அனைவரும் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

ஜெயம் ரவி

நடிகர் ஜெயம்ரவியின் இந்த அறிவிப்பால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நேரத்தில் ஆங்காங்கே தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. மேலும் விழாக்காலங்களில் பொது மக்கள் மிகவும் கவனத்துடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web