நடிகர் ஜெயம் ரவிக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் பொன்னியின் செல்வன் டீம்!

 
பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் பழைய சினிமா சாதனைகளை எல்லாம் முறியடித்து ரூ500 கோடி கலெக்‌ஷனை நோக்கி இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், நடிகர் ஜெயம்ரவி, தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, அவரது ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளது, பொன்னியின் செல்வன் படக்குழுவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ஏறக்குறைய இரண்டாம் பாகத்தை முடித்து விட்ட இயக்குநர் மணிரத்னம்,  படத்தை ஏப்ரலில் ரிலீஸ் செய்யும் வேலைகளில் மூழ்கியுள்ளார். 

ஜெயம் ரவி

இதற்காக நடிகர், நடிகைகள் டப்பிங் பணிகள், ஷூட்டிங் என்று பிஸியாக பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் ஆர்வமுடன் கலந்து கொண்டு வருகின்றனர். முதல் பாகத்தில் பெரிதாக காட்சிகள் இல்லாத ஜெயம் ரவிக்கு இரண்டாம் பாகத்தில் அதிக காட்சிகள் உள்ளன. த்ரிஷாவுடனும், ஐஸ்வர்யா ராயுடனும், கார்த்தியுடனும் அதிக காட்சிகளில் நடித்துக் கொண்டிருக்கும் ஜெயம் ரவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, அவர்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

நடிகர் ஜெயம்ரவி அவரது ட்விட்டர் பக்கத்தில், ‘‘எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றி, நான் உடனடியாக என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் தேவைப்படும் பட்சத்தில் தங்களைப் பரிசோதித்துக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். மேலும் அனைவரும் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

ஜெயம் ரவி

நடிகர் ஜெயம்ரவியின் இந்த அறிவிப்பால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நேரத்தில் ஆங்காங்கே தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. மேலும் விழாக்காலங்களில் பொது மக்கள் மிகவும் கவனத்துடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web