நடிகர் சரத்குமார் மருத்துவமனையில் அனுமதி!! நாட்டாமைக்கு என்ன ஆச்சு..?

 
சரத்குமார்

பிரபல நடிகர் சரத்குமார் உடல்நல குறைவு காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி, திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்கள், தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சரத்குமார்

நடிகர் சரத்குமார் வயிற்றுப்போக்கால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, உடலில் நீர்சத்து குறைபாடு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில்   அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.   இவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததை தொடர்ந்து, தற்போது  நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரத்குமார்

அவரை மனைவி ராதிகா மற்றும் மகள் வரலட்சுமி மருத்துவமனையில் கவனித்துக்கொள்கின்றனர்.   மேலும் அவர் மருத்துவர்களின் சிறப்பு கண்காணிப்பில் இருந்து வருகிறார். திடீரென சரத்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவரது   ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

From around the web