நடிகை ரோஜா கின்னஸ் சாதனை! ஒரே நேரத்தில் 3,000 கேமிரா! செம க்ளிக்!

 
ரோஜா

ஆர்ப்பரிக்கும் கூட்டம்... அத்தனை பேரும் புகைப்பட கலைஞர்கள். ஒரே நேரத்தில் 3,000 புகைப்பட கலைஞர்கள் கூடியிருந்தார்கள். 3,000 கேமிராக்களும் நடிகை ரோஜாவையே போஃகஸ் செய்துக் கொண்டிருந்தன. ஒரே நேரத்தில் விதவிதமான கோணத்தில் ப்ளாஷ்கள் மின்னின. இதுவரையில் யாரையும் ஒரே நேரத்தில் இப்படி 3,000 பேர் புகைப்படம் எடுத்ததில்லையாம். நடிகை ரோஜா சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றார்.

90ஸ் கிட்ஸ் பேவரைட் நாயகியாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. இப்போதும், துணிச்சலான நடவடிக்கைகளின் மூலமாக மிகவும் கொண்டாடப்படும்  திரை நாயகியாக  வளம் வருபவர்  நடிகை ரோஜா. தற்போது முழு நேர அரசியலில் ஈடுபட்டுள்ள நடிகை ரோஜா, ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்திலுள்ள நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும், மேலும் ஆந்திரா மாநிலத்தின் சுற்றுலாத்துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராகவும் உள்ளார்.

இந்நிலையில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் ரோஜா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக அமைச்சர் ரோஜாவை ஒரே நேரத்தில் 3 ஆயிரம் பேர் போட்டோ எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து அமைச்சர் ரோஜா நிகழ்ச்சி நடந்த தனியார் திருமண மண்டபத்திற்கு வெளியே அமைக்கப்பட்டு இருந்த மேடையில் ஏறினார்.

அவரை சுற்றிலும் 3 ஆயிரம் போட்டோகிராபர்கள் நிற்க வைக்கப்பட்டனர். ஒன் கிளிக் ஆன் சேம் டைம் என்ற அர்த்தத்தில் ஒரே நேரத்தில் 3 ஆயிரம் போட்டோகிராபர்களும் அமைச்சர் ரோஜாவை போட்டோ எடுத்தனர். இதனை 'வொண்டர் புக் ஆப் ரெக்கார்ட்'  என்ற நிறுவனம் சாதனையாக  அங்கிகறித்து கின்னஸ் புத்தகத்தில் இடம் கொடுத்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web