தலைக்கேறிய போதை!! தீயில் குதித்த நபர்!!

 
நெல்லையில் போதை நபர் தீயில் குதிப்பு

போதை தலைக்கேறினால் என்ன செய்கிறோம் என்று தெரியாது என்பார்கள் குடிமகன்கள். அடுத்த நாள் காலையில் என்ன செய்தோம் என்ன பேசினோம் என்று கூட சிலருக்கு தெரியாது. அதுபோல தான்  இங்கு போதை தலைக்கேறிய நபர் ஒருவர் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் தீயில் குதித்துள்ளார்.

முருகன்

நெல்லை பாளையங்கோட்டை அருகே கார்த்திகை தீபத் திருவிழாவுக்காக அமைக்கப்பட்ட சொக்கப்பானையில் மதுபோதையில் இருந்த நபர் குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   பாளையங்கோட்டை  அடுத்த   சமாதானபுரத்தில்   எழுந்தருளியுள்ள   காளியம்மன் கோவிலில்  கார்த்திகை  திருநாளை முன்னிட்டு  சொக்கப்பனை  ஏற்றும்  நிகழ்ச்சி   நடைபெற்று  வந்தது

மருத்துவமனை

இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் மதுபோதையில் என்ன செய்கிறோம் என்று தெறியாமல் எரிந்துக்கொண்டிருந்த சொக்கப்பனை தீயினுள் திடீரென குதித்துள்ளார். இதனால் படுகாயமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவ  கல்லூரி மருத்துவமனையில்  அனுமதித்தனர். அவருக்கு அங்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த சம்பவம் பற்றி பாளையங்கோட்டை  பகுதி   காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

From around the web