நாளை வரை கூடுதலாக மெட்ரோ ரெயில்கள் இயக்கம்! பயணிகள் மகிழ்ச்சி!

 
இன்று இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் சேவை!

தீபாவளி களை கட்ட துவங்கி விட்டது. திரும்புகிற இடங்களில் எல்லாம் ஜனதிரள். அடுத்தடுத்த நாட்களில் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு படையெடுத்து கிளம்ப தயாராகி விடுவார்கள். ஷாப்பிங், சொந்த ஊருக்கு செல்பவர்கள் என ஜன நெரிசலில் சென்னை மூச்சு திணறும். இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக 3 நாட்களுக்கு கூடுதலாக மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வருகிற திங்கட்கிழமை (24ம் தேதி) தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அதற்காக பொது மக்களின் வசதிக்கேற்ப நாளை வரையில் கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மெட்ரோ ரயில் நிலையங்களில் மினி பஸ் சேவை: மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறும்போது, ‘‘தீபாவளி நேரத்தில் நெரிசலான நேரங்களில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 5 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும். அதன்படி இன்று முதல் வருகிற 22 வரையிலான 3 நாள்களுக்கு இரவு 10 மணி வரை மெட்ரோ ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

மெட்ரோ ரயில்
இந்த 3 நாட்களிலும் 5 நிமிடத்திற்கும் குறைவான இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகிறது. இந்த அறிவிப்பினால் மெட்ரோவில் பயணம் செய்யும் பயணிகள் மற்றும் ஊருக்கு செல்லும் பயணிகள் ஆகியோர் பயன் அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சென்னையின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்க பலரின் தேர்வு மெட்ரோ ரெயிலாகும்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web