அடி தூள்.. பொங்கலுக்குள் ரேஷன் கடைகளில் 6,503 பணியிடங்கள் நிரப்படும்! வெளியானது அறிவிப்பு!

 
தமிழக அரசு

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 6,503 பணியிடங்கள் 2023 பொங்கலுக்குள் நிரப்பப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். 

இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், கூட்டுறவு சங்கங்களில் வரலாற்றில் முதல் முறையாக பயிர்க்கடன் அளவு ரூ.10 ஆயிரம் கோடியை தாண்டி சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

ரேஷன்

மேலும் தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 33 ஆயிரத்து 487 கடைகளில் காலியாக உள்ள 5,578 விற்பனையாளர் பணியிடங்களுக்கு 2 லட்சத்து 6 ஆயிரத்து 641 விண்ணப்பங்களும், 925 கட்டுநர் பணியிடங்களுக்கு 23 ஆயிரத்து 166 விண்ணப்பங்களும் என மொத்தம் 6,503 பணியிடங்களுக்கு 2 லட்சத்து 29 ஆயிரத்து 807 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன. 

ரேஷன்

விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெற வருகிற 14ம் தேதி கடைசி நாளாகும். இந்த காலிப்பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட்டு, 2023 பொங்கல் பண்டிகைக்கு முன்பாக அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web