பகீர்!! கள்ளக்குறிச்சி அருகே மீண்டும் ஒரு பள்ளி மாணவி தற்கொலை.! தொடரும் அதிர்ச்சி!!

 
மாணவி தற்கொலை

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஶ்ரீமதி கடந்த 13 ஆம்தேதி பள்ளி விடுதியில் உள்ள மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ததாக கூறப்பட்டது. இதனையடுத்து மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. மேலும் மாணவி மரணம் தொடர்பாக தமிழகம் முழுவதும் விவாதப்பொருளாக மாறியது. அனைத்து தொலைக்காட்சிகளிலும் நேரலை செய்யப்பட்டது. மேலும் சமூக வலை தளத்தில் மாணவி மரணம் தொடர்பாக 90% செய்திகள் பகிரப்பட்டது. இதனையடுத்து இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் மறைவதற்குள்  தமிழகத்தில் ஏராளமான மாணவ மாணவிகள் தொடர் தற்கொலையில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது அதே போன்ற ஒரு சம்பவம்  மீண்டும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிகழ்ந்துள்லது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள தியாகதுருகம் அருகே அமைந்துள்ள கோவிந்தசாமிபுரத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகிலிருந்த அலமேலு என்ற பெண்மணியின் வீட்டிற்கு உறவுக்கார இளைஞரான விஜய் என்பவர் அடிக்கடி வந்து செல்வது வழக்கம். அப்போது 12-ஆம் வகுப்பு மாணவியுடன் விஜய்க்கு காதல் ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் அத்தை அலமேலு தெரியவந்த நிலையில் விஜய் ஊருக்கு சென்ற நேரம் பார்த்து மாணவியின் வீட்டிற்கு சென்று அவரிடம் தனது கணவர் மற்றும் மகனுடன் சேர்ந்து தகராறு செய்துள்ளார்.

இதனால் மனமுடைந்த அந்த சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை தொடர்ந்து மாணவியின் தந்தை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web