பெண் காவலரை தாக்கிய அதிமுக வழக்கறிஞரால் பரபரப்பு !!

 
ராஜம்மாள்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மருதுபாண்டியர் மேட்டு தெருவை சேர்ந்தவர் முத்து மணிகண்டன். வழக்கறிஞரான இவர் அதிமுகவில் நிர்வாகியாக உள்ளார். இவர் நேத்து சிவகாசி - திருத்தங்கல் சாலையில் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக சைக்கிளில் வந்தவர் எதிர்பாராதவிதமாக இவரது பைக் மீது மோதியதாக தெரிகிறது. இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

ராஜம்மாள்

ஆத்திரமடைந்த முத்து மணிகண்டன் சைக்கிளில் வந்தவரை தாக்கி சண்டை போட்டுள்ளார். இருவரின் தகராறு காரணமாக பிரதான அந்த சாலையில் திடீரென போக்குவரத்து நெரிசல் உண்டானது.
அப்போது சிவகாசி முருகன் கோயில் அருகே பணியில் இருந்த பெண் போக்குவரத்து காவலரான ராஜம்மாள் (48) சண்டையை விலக்கி விட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த முத்து மணிகண்டன் பெண் காவலர் ராஜம்மாளின் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகின்றது. இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசில் டிராபிக் போலீஸ் ராஜம்மாள் புகார் அளித்தார்.
ராஜம்மாள்
போலீசார் முத்து மணிகண்டன் மீது வழக்குப்பதிவு கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
From around the web