விஜய்க்கு அடுத்து தான் அஜித்!! மோதும் வாரிசு, துணிவு!! பிரபல தயாரிப்பாளர் சர்ச்சை பேச்சு!!

 
வாரிசு, துணிவு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக விஜய், அஜித் இருவரும் திகழ்ந்து வருகின்றனர். இருவரும் முன்னணி கதாநாயகர்கள் என்பதால் இவர்களது ரசிகர்கள் மத்தியில் போட்டிகள் நிலவி வருகிறது. இவர்கள் நடிக்கும் படங்களும் தீபாவளி, பொங்கல், போன்ற பண்டிகளை நாட்களில் மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகும்.

தில் ராஜு

அந்த வகையில் விஜய் நடித்துள்ள வாரிசு, அஜித்குமார் நடித்துள்ள துணிவு ஆகிய 2 படங்களும் பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளை இந்த 2 படங்களும் சரிபாதியாக பிரித்துக்கொள்ள உள்ளன. மேலும், இப்படங்களின் தொடர் அப்டேட்கள் இணையத்தை ஆக்கிரமித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. இந்நிலையில், 'வாரிசு' படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு அளித்துள்ள பேட்டி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தில் ராஜு

அதில், "விஜய் தமிழ்நாட்டின் நம்பர் ஒன் ஸ்டாராக இருக்கிறார். அது அனைவருக்கும் தெரியும். அவருக்கு அடுத்த இடத்தில் தான் அஜித் இருக்கிறார். இரண்டு படங்களுக்கும் தலா 400 திரையரங்குகள் ஒதுக்குவது சரியாக இருக்காது. துணிவு திரைப்படத்தை ரிலீஸ் செய்யும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாரிசு படத்திற்கு அதிக திரையரங்குகள் வேண்டுமென பேசப்போகிறேன்" என்று கூறியுள்ளார். இவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

From around the web