அஜீத் திருச்சி வருகை!! அலைமோதிய ரசிகர்கள் கூட்டம்!!

 
அஜித்

திருச்சியில் மாநில துப்பாக்கி சுடும் போட்டிகள்  ஜூலை 25 முதல் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டிகள்  திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் செயல்பட்டு வரும் ரைபிள் கிளப்பில் தொடங்கப்பட்டுள்ளன.

அஜீத்

இதில் தமிழகம் முழுவதும் இருந்து துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெற்ற சுமார் 1,300 போட்டியாளர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. சிறியவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என தரம் பிரிக்கப்பட்டு 16, 19, 21 ஆகிய வயதுக்கு உட்பட்ட பிரிவினருக்கும், 21 முதல் 45 வயது, 45 முதல் 60 வயது மற்றும் 60 வயதுக்கு மேல் உள்ள பிரிவினருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.  

அஜீத்

பிஸ்டல் துப்பாக்கி சுடுவதற்கான போட்டியாளர்களுக்கு 28ம் தேதி வரை போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படும். ஜூலை  29ம் தேதி முதல் 31ம் தேதி வரை ரைபிள் துப்பாக்கி சுடுபவர்களுக்கான போட்டிகள் நடைபெற உள்ளன. இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் நடிகர் அஜித் கலந்து கொள்வதற்காக திருச்சி வந்துள்ளார். அவர் பத்திரிகையாளர்களை பார்த்ததும் திரும்பி வந்து நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்து சென்றார். இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்கள் தென்னிந்திய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web