மதுபானப்பிரியர்கள் அதிர்ச்சி!! நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!!

 
டாஸ்மாக்

நாளை அக்டோபர் 30 தேவர் ஜெயந்தி தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் தேவரின் உருவச்சிலை, அவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. இதனால் அவரது நினைவகம் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் உச்சகட்ட பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சக்கைபோடு போட்ட தீபாவளி சேல்ஸ்!! மண்டலம் வாரியாக டாஸ்மாக் விற்பனை பட்டியல்!!

அதே நேரத்தில் நாளை சஷ்டி விழா மற்றும் சூரசம்ஹாரமும் நடைபெற உள்ளது. இதனால் முருகனின் அறுபடை ஆலயங்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அந்த வகையில் திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவிற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 30ம் தேதி முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் விடுமுறை

இந்த அறிவிப்பை  அந்த மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் நாளை அக்டோபர் 30ம் தேதி  தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து அரசு  மற்றும் தனியார் மதுபானக் கடைகளும், மதுபானக் கூடங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும். மது பானம் விற்பனை, மது பானத்தை கடத்துதல், அவற்றை பதுக்கி வைத்தல் போன்றவை உறுதி செய்யப்படால் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web