அலர்ட்! இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!

 
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! அடுத்த 3 நாட்களுக்கு கனமழை!

வங்க கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பெய்த தொடர் மழையில், இந்தாண்டு வடகிழக்கு பருவ மழை  பெரும்பாலான மாவட்டங்களில் வெளுத்து வாங்கியது. சீர்காழியில், கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை பெய்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் கனமழை பெய்த நிலையில், பல இடங்களில் பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ள அவலங்களும் உள்ளன. இந்நிலையில், மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பது விவசாயிகளிடையே கலக்கத்தை உருவாக்கியுள்ளன.

மழை

கடந்த வாரம் முழுவதும் பலத்த கனமழை பெய்த நிலையில், நேற்று முதல் படிப்படியாக மழை குறையத் தொடங்கி, வெள்ள நீர் வடிய துவங்கியுள்ளது. இந்நிலையில், மீண்டும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வெளியான அறிவிப்பு விவசாயிகளை கலக்கமடையவே செய்துள்ளன. 

மழை

பொங்கலுக்கு கரும்பு பயிரிட்டவர்கள் மழை குறித்து தங்களது அச்சத்தை தெரிவித்துள்ளனர். இந்த வருட தை மாத அறுவடையிலும் இது பாதிப்பை ஏற்படுத்தும். வாழை, தக்காளி போன்றவைகளுக்கு இன்னும் பெரியளவில் பாதிப்புகள் உண்டு.

இன்று நவம்பர் 16ம் தேதி முதல் தமிழகம், புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் எனவும், வங்க கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழத்தில் தற்போது பலத்த மழைக்கு வாய்ப்பில்லை என்றும் தமிழக கடலோர பகுதிகளில் நவம்பர் 19ம் தேதி கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அன்று தொடங்கும் மழை  படிப்படியாக தீவிரமடைய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web