நாடு முழுவதும் இன்று முதல் இந்தப் பொருட்கள் எல்லாம் விலை உயர்கிறது!

 
பாக்கெட் உணவு பொருட்கள்

இன்று முதல் நாடு முழுவதும் இந்தப் பொருட்களுக்கு எல்லாம் ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டு, விலை உயர்கிறது. இந்தியா முழுவதும் கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு பொருளாதாரத்தில் பெருத்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மத்திய நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன் தலைமையில் கடந்த மாதம் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சில பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ஜி.எஸ்.டி. விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சில பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. விகிதமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரி விதிப்பு நடவடிக்கைகள் அனைத்தும் இன்று  ஜூலை 18 திங்கட்கிழமை முதல் அமலுக்கு வருகின்றன.

ஜிஎஸ்டி

பாக்கெட்டில் அடைக்கப்பட்ட மற்றும் லேபிள் ஒட்டி விற்கப்படும் இறைச்சி , மீன், பன்னீர், தேன், உலர்ந்த காய்கறிகள், உலர்ந்த மக்கானா, கோதுமை மாவு மற்றும் பிற தானியங்கள், தயிர் உட்பட  அனைத்து  பால் பொருட்கள் மீதும்  5% ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டு உள்ளது. வெட்டுகத்தி, பேப்பர் கத்தி, பென்சில் ஷார்ப்னர், கரண்டி, முட்கரண்டி, ஸ்கிம்மர், கேக்-சர்வர், எல்.இ.டி. விளக்குகள், மை, வரையும் கருவிகள் போன்ற பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. 12ல் இருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதைப்போல தூய்மை எந்திரம், வரிசைப்படுத்தல் அல்லது தரம் பிரித்தல் எந்திரம், விதை, தானிய பருப்பு வகைகள், அரவை எந்திரம், பவன் சக்கி மற்றும் வெட் கிரைண்டர் ஆகியவற்றின் வரியும் 5%  இருந்து 18% ஆக  உயருகிறது.

 

சோலார் வாட்டர் ஹீட்டருக்கு 5 % இருந்து 12 % ஆக வரி உயர்த்தப்படுகிறது. வங்கி காசோலைகளுக்கு 18% ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டு உள்ளது. இவை தவிர வரைபடங்கள், ஹைட்ரோகிராபிக் அல்லது அதையொத்த வரைபடங்கள், உலக வரைபடங்கள், சுவர் வரைபடங்கள், நிலப்பரப்புத் திட்டங்கள் மற்றும் உலக உருண்டைகள் உட்பட அனைத்து வகையான விளக்கப் படங்களுக்கும் 12 %  ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது. அதே போல்  ரூ.1,000 வரையிலான ஓட்டல் அறை வாடகைக்கு 12%ம், ரூ.5000க்கு மேற்பட்ட மருத்துவமனை  அறை வாடகைக்கு 5 %ம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது.

சூப்பர் மார்க்கெட்

உயிரி மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு வசதிகளுக்கு 12 % ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது. மின்சார வாகனங்கள் சாலைகள், பாலங்கள், ரெயில்வே, மெட்ரோ, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் சுடுகாடுகளுக்கான பணி ஒப்பந்தங்களுக்கும் 12லிருந்து  18 % ஆக  வரி அதிகரிக்கும். அதே நேரம், பேட்டரி பேக் பொருத்தப்பட்டாலும் இல்லாவிட்டாலும் மின்சார வாகனங்களுக்கு 5% ஜி.எஸ்.டி. சலுகை அளிக்கப்படுகிறது. மேலும் எரிபொருள் விலையை உள்ளடக்கிய லாரி மற்றும் சரக்கு வண்டிகளின் வாடகை 18ல் இருந்து 12 % ஆக குறைக்கப்பட்டு உள்ளது. மேலும் பல்வேறு விதமான மாற்றி அமைக்கப்பட்ட ஜி.எஸ்.டி. விகிதங்களும் இன்று முதல் அமலுக்கு வர உள்ளன. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web