அசத்தும் திருநங்கைகள்!! மருத்துவதுறையில் கால் பதித்து சாதனை! ​​​​​​​

 
திருநங்கைகள்

திருநங்கைகள் என்றாலே பாலியல் தொழில் செய்பவர்கள் என்ற கண்ணோட்டம் பலருக்கு உள்ளது. அதனை உடைத்து பல திருநங்கைகள் அரசு மற்றும் தனியார் துறைகள் மட்டுமின்றி சினிமா துறையிலும் சாதனை புரிந்து வருகின்றனர். தற்போது மருத்துவதுறையிலும் திருநங்கைகள் கால் பதித்து அசத்தியுள்ளனர்.

மருத்துவர்கள்

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த  பிராச்சி ரத்தோட் மற்றும் ரூத் ஜான் பால் என்ற இரு திருநங்கைகள்   மருத்துவம் பயின்று முடித்த நிலையில் பல்வேறு மருத்துவமனைகளில் இவர்களுக்கு வேலை மறுக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் இப்படி வேலை கிடைக்காத நிலையில், தெலுங்கானா அரசு இவர்களுக்கு அரசு மருத்துவமனையில் வேலையை வழங்கியுள்ளது. இதனால் தெலுங்கானாவில் பணியமர்த்தப்பட்ட முதல் திருநங்கை இவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவர்கள்

இவர்கள் இருவரும் உஸ்மானியா பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்தவர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். இது பற்றி பிராச்சி ரத்தோட் பேசிய போது, அரசின் இந்த செயலானது நாங்கள் எதிர்பார்க்கவில்லை, கடந்த 2018 ஆண்டு முதல் சுமார் 15 மருத்துவமனைகளால் நான் நிராகரிக்கப்பட்டேன், தற்போது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறினார்.

From around the web