ஆம்புலன்ஸ் மரத்தில் மோதி பெரும்விபத்து! கர்ப்பிணியும், அவரது தாயாரும் சம்பவ இடத்திலேயே பலி!

 
ஆம்புலன்ஸ்

ஆம்புலன்ஸ் வாகனம் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில், சம்பவ இடத்திலேயே கர்ப்பிணியும், அவரது தாயாரும் பலியானார்கள். 108 ஆம்புலன்சில் பிரவசத்திற்காக சென்று கொண்டிருந்த கர்ப்பிணியும் அவரது தாயும் விபத்தில் உயிரிழந்த சோக சம்பவம் சிவகங்கையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி அருகே நெஞ்சத்தூரில் வசித்து வருபவர் குமரேசன்.  இவரது மனைவி நிவேதா (20) கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணிக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டது. அதில் கர்ப்பிணி பெண் நிவேதாவுடன் அவரது தாய் விஜயலட்சுமியும் சென்றார்.

ஆம்புலன்ஸ்

108 ஆம்புலன்ஸ் செங்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது மரத்தில் மோதி பெரும் விபத்துக்குள்ளானது. இதில் கர்ப்பிணி கர்ப்பிணி நிவேதா மற்றும் அவரது தாய் விஜயலட்சுமி இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்கள்.

ஆம்புலன்சை ஓட்டிச் சென்ற டிரைவர்  மலையரசன்(27), பணியாளர் திருச்செல்வி ஆகியோருக்கு படுகாயம் ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளானதை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மற்றும் அங்கு சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர்.

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடனடியாக படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த கர்ப்பிணி மற்றும் அவரது தாயின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web