வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 11 மாத குழந்தை பக்கெட் நீரில் தவறி விழுந்து பலி..!

 
குழந்தை உயிரிழப்பு

நாமக்கல்  மாவட்டம்  ராசிபுரம்  அடுத்த  தொட்டியபட்டி  பகுதியை சேர்ந்தவர் ராஜா. அவரது  மனைவி  வனிதா.  இவர்களுக்கு  திருமணம் ஆகி 3 மகன்கள் உள்ளனர்.  இந்த நிலையில்   தாய்  வனிதா அருகாமையில்  உள்ள நீர்  தேக்க  தொட்டில் குடிநீர் பிடிக்க சென்றுள்ளார்.  அப்போது வீட்டில் 2வது மகன் யுவன்  மற்றும்  இளைய மகன் கவினேஷ்  இருவரும் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.  வீட்டில் அவரது தாய் வனிதா பிளாஸ்டிக் பக்கெட்டில் நீர் நிரப்பியுள்ளார்.  அப்போது  விளையாடிக் கொண்டிருந்த 11 மாத குழந்தை  கவினேஷ் எதிர்பாராத விதமாக பிளாஸ்டிக்  பாக்கெட்டில் விழுந்து மூச்சு  திணறி பரிதாபமாக உயிரிழந்தது.

இந்நிலையில் குழந்தையை காணததால் அண்ணன் யுவன் நீண்ட நேரமாக வீட்டில்  தேடி உள்ளார்.  பின்னர் வீட்டில் உள்ள பிளாஸ் டிக் பக்கெட்டில்  தம்பி இறந்து  கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அவர் ஓடி சென்று தனது தாயிடம் கூறியுள்ளார்.  பின்னர் அலரி துடித்து ஓடிவந்த பெற்றோர்  குழந்தையை  மீட்டு  மல்லசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அப்போது குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

இதனால் வேதனையடைந்த பெற்றோர் மருத்துவமனையில் அலரி துடித்தனர். பின்னர் இது குறித்து தகவறிந்து வந்த வெண்ணந்தூர் காவல்துறையினர் குழந்தையின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் இது குறித்து  வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிளாஸ்டிக் பக்கெட்டில் 11 மாத குழந்தை நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web