அண்டா நிறைய சரக்கு.. தடபுடலாக அசைவ விருந்து! அரசு பள்ளியில் அத்துமீறிய ஆசிரியர்!

 
பள்ளியில் மது

அர்ப்பனுக்கு வாழ்வு வந்தால்... ன்னு நம்மூர்ல பழமொழி சொல்வாங்க இல்லையா? அந்த மாதிரி.. சந்தோஷமோ சோகமோ சரக்க எடு என்று வாழ்பவர்கள் இன்னமும் பல மாநிலங்களில் ஏன்.. பல நாடுகளில் வாழ்ந்து தான் வருகிறார்கள். உங்களுடைய சுதந்திரம் என்பது அடுத்தவரை பாதிக்காத வரையில் பிரச்சனையில்லை என்பதை படித்த ஆசிரியரே புரிந்து கொள்ளாமல் அத்து மீறியது தான் இப்போது வம்பாக வளர்ந்து நிற்கிறது.

மத்திய பிரதேசத்தில் அரசு பள்ளியின் ஆசிரியர் ஒருவர் இப்படி, அவரது சந்தோசத்தை வெளிப்படுத்த, தனது நண்பர்களை எல்லாம் அழைத்து, வேலைப் பார்க்கும் அரசு பள்ளி வளாகத்தில், அண்டா நிறைய சரக்கை மிக்ஸ் செய்து, அசைவ உணவு வகைகளுடன் தடபுடலாக மது விருந்து அளித்துள்ளார். இத்தனைக்கும் இந்த தடபுடல் மது விருந்து பள்ளி வேலை நாளில் நடந்திருக்கிறது. மாணவர்களின் வாயிலாக இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்ட பெற்றோர்களும், அந்த பகுதி மக்களும் ஒன்று திரண்டு அடுத்த நாள் அந்த பள்ளிக்குச் சென்று வாக்கு வாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்தன் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட ஆசிரியரை சஸ்பெண்ட் செய்துள்ளனர். 

பீர் டாஸ்மாக்

ஆசிரியர் என்பவர் மாணவ, மாணவிகளுக்கு முன்னோடியாக இருந்து அவர்களை நல்வழிப்படுத்துபவர். ஆனால் சில தவறான ஆசிரியர்களால் குழப்பமும், அதிர்ச்சியும் ஏற்பட்டு வருகிறது.

மத்தியபிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டம் போடா கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் அப்பள்ளி ஆசிரியர் ஒருவர், பள்ளி வளாகத்தில் வைத்து தடபுடலாக மது விருந்து நடத்தினார். அந்த விருந்தில் பல்வேறு வகை மதுபானங்களும், அசைவ உணவுகளும் வந்திருந்தவர்களுக்கு தாராளமாக பரிமாறப்பட்டன. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவர்களில் சிலர், அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக்கினார்கள்.

ஆசிரியர்
இதைத் தொடர்ந்து மாவட்ட கல்வி அதிகாரி, அத்துமீறி நடந்து கொண்ட ஆசிரியர் மீது, நடத்தை விதிகளை மீறியதாக இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் மது விருந்து கொடுத்த ஆசிரியர் மற்றும் சம்பந்தப்பட்டவர்களிடம் உரிய விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட அதிகாரி உறுதியளித்தார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

 

 

From around the web