அந்தமான்- நிக்கோபார் தீவுகளுக்கு மாவீரர்களின் பெயர்.. பிரதமர் அதிரடி !!

 
அந்தமான் & நிக்கோபார் தீவுகளின் வரலாற்று முக்கியத்துவத்தை மனதில் கொண்டு, நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் நினைவை போற்றும் வகையில், 2018ஆம் ஆண்டு தீவுக்கு பிரதமர் பயணம் சென்ற  செய்த போது, ராஸ் தீவுகளுக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தீவு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நீல் தீவு மற்றும் ஹேவ்லாக் தீவு ஷாஹீத் தீவு மற்றும் ஸ்வராஜ் தீவு என மறுபெயரிடப்பட்டது.

ஆண்டுதோறும் ஜனவரி 23ஆம் தேதி மாவீரர்களின் நினைவாக பராக்ரம் திவாஸ் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு பராக்ரம் திவாஸ் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காலை 11 மணிக்கு காணொளி மூலம் பங்கேற்கிறார்.

ஜனவரி 23ஆம் தேதி சுதந்திரப் போராட்ட மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாளாகும். இந்த ஆண்டு பராக்ரம் திவாஸ் நிகழ்வின் போது,  நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவில் கட்டப்படவுள்ள நேதாஜிக்கு அர்ப்பணிக்கப்படும் வகையிலான தேசிய நினைவகத்தின் மாதிரியையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக படை திரட்டி போராடிய மாவீரர் போஸ் நினைவாக பராக்ரம் திவாஸ் கொண்டாடப்படுகிறது.andaman

அந்தமான் & நிக்கோபார் தீவுகளின் வரலாற்று முக்கியத்துவத்தை மனதில் கொண்டு, நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் நினைவை போற்றும் வகையில், 2018ஆம் ஆண்டு தீவுக்கு பிரதமர் பயணம் சென்ற  செய்த போது, ராஸ் தீவுகளுக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தீவு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நீல் தீவு மற்றும் ஹேவ்லாக் தீவு ஷாஹீத் தீவு மற்றும் ஸ்வராஜ் தீவு என மறுபெயரிடப்பட்டது.

பராக்கிரமசாலிகளுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்பதில் பிரதமர் எப்போதுமே உறுதிப்பாட்டுடன் செயல்படுவார் என பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த உணர்வின் வெளிப்பாடாக, அந்தமான்-நிக்கோபார் பகுதியில் உள்ள 21 பெரிய பெயரிடப்படாத தீவுகளுக்கு பரம் வீர் சக்ரா விருது பெற்ற 21 பேரின் பெயரைச் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

andaman

தேசத்தின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்காக இறுதியான உயிர்த்தியாகத்தைச் செய்த நமது மாவீரர்களுக்கு இந்த சிறப்பான நடவடிக்கை என்றென்றும் அஞ்சலி செலுத்துவதாக அமையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி காணொலிக்காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி இதனை தொடங்கி வைக்கிறார்.

From around the web