மேலும் ஒரு +2 மாணவி தூக்கிட்டு தற்கொலை! தமிழகத்தில் தொடரும் பெரும் சோகம்!

 
தற்கொலை

தமிழகத்தில் மாணவிகள் தற்கொலை செய்து வரும் போக்கு அதிகரித்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களாக பல மாவட்டங்களில் தொடர்ந்து மாணவிகள் தற்கொலை செய்து வருகின்றனர். சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியின் 3வது மாடியில் இருந்து கீழே குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில், நேற்று திருவள்ளூரில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில், இன்று கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளது பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினமே  கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்று, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்கொலை

கடலூர், விருத்தாசலம் அருகே, ஆயர்மடத்தில் 12ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலை செய்து கொண்டு இறந்த மாணவியின் உடலை, போலீசாரிடம் மறைத்து இறுதி சடங்குக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

இந்நிலையில், மாணவியின் உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, மாணவியின் மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை

12ம் வகுப்பு மாணவியின் தற்கொலைக்கான காரணம் என்னவென்று இதுவரை வெளியாகவில்லை.  பள்ளி மாணவிகள் அடுத்தடுத்து தற்கொலை செய்து வரும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிக் கல்வித்துறையும், தமிழக அரசும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் தொடர்ச்சியான தற்கொலைகள், மரணங்கள் குறித்து அதிக அக்கறை எடுத்துக் கொள்ளாமல் மெத்தனப் போக்கைக் கடைப்பிடிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web