மேலும் 3 ஆண்டுகள் பணி நீட்டிப்பு!! உயர்கல்வித்துறை அதிரடி!!

 
ஆசிரியர்கள்

உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணையின்படி தற்காலிக பேராசிரியர்களுக்கு மேலும் 3 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் பேராசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தமிழகத்தில் செயல்பட்டு  வரும் அனைத்து அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிகமாக பேராசிரியர்களாக 4,681 பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

ஆசிரியர்கள் கூட்டம்

இவர்களின் பணி காலத்தை மேலும் உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்று உயர்கல்வித் துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.அதிகளவிலான கோரிக்கைகள் வரப்பெற்றதை அடுத்து அனைத்து அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிகமாக பேராசிரியர்களாக பணியாற்றி வரும் 4,681 பேரின் பணிக்காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு உயர்த்தி உயர்கல்வித் துறை அதிரடியான அரசாணை வெளியிட்டுள்ளது.

ஆசிரியர்கள்

இவர்களின் ஊதியம் மற்றும் பிற படிகள் வழங்க ஏதுவாக அடுத்த 3 ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் பேராசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.அத்துடன் விரைந்து நடவடிக்கை எடுத்த உயர்கல்வித்துறைக்கு தமது நன்றிகளையும், பாராட்டுக்களையும் சமூக வலைதளங்களில் பேராசிரியர்கள் பதிவிட்டு வருகின்றனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web