நாளை முதல் மருத்துவ படிப்புக்களுக்கான விண்ணப்பப் பதிவு தொடக்கம்!! மிஸ் பண்ணீடாதீங்க!!

 
ஆன்லைன் விண்ணப்பப் பதிவு

மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை துவக்கம் – நாளை முதல் விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்தியாவில்  மருத்துவம் சார்ந்த படிப்புக்களை படிப்பதற்கு நீட் தேர்வு எழுத வேண்டியது அவசியம். அந்த வகையில் நடப்பாண்டில் தமிழகத்தில் பி.பார்ம், பி.எஸ்.சி. நர்சிங் மற்றும் பட்டயப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.நடப்பாண்டிற்கான நீட் தேர்வுகள்  ஜூலை 17ம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்டன. சுமார் 18 லட்சம் பேர் இத்தேர்வை எழுதியுள்ளனர்.

நீட்

இந்தாண்டு நீட் தேர்வை ஏறக்குறைய 95 % மாணவர்கள் எழுதியிருந்தனர். இந்த ஆண்டு தேர்வு சற்று எளிதாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தேர்வு முடிவுகளை தேர்வர்கள் எதிர்பார்த்து காத்து கிடக்கின்றனர். இந்தாண்டு NCERT பாடத்திட்டத்தை நன்றாக படித்த மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.  

இந்திய பொதுத் தகுதிப்பட்டியலில் பெற்றுள்ள அதிக மதிப்பெண்களின் அடிப்படையில் கட் ஆப் சதவீத மதிப்பெண்கள் கணக்கிடப்படுகின்றன.  தற்போது இந்தியாவில் முழுவதும் 272 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 41388 இடங்கள் மருத்துவ படிப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில்  மட்டும் உள்ள 37 அரசு மருத்துவ கல்லூரிகளில் 5200 இடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்புக்கான விண்ணப்ப பதிவு தொடங்கி உள்ளது.
இது குறித்து மருத்துவக் கல்வி இயக்ககம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

நீட்

2022-2023 ம் கல்வியாண்டில் பி.பார்ம்போஸ்ட் பேசிக் பி.எஸ்.சி. நர்சிங் படிப்பு & போஸ்ட் பேசிக் டிப்ளமோ இன் சைக்கியாட்ரி நர்சிங் படிப்பு, பெண்களுக்கான செவிலியர் பட்டயப் படிப்பு, மருத்துவம் சார்ந்த பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளில் சேர விரும்புபவர்கள் www.tnhealth.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆகஸ்ட் 1  நாளை முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web