மாணவர்களே தயாரா?!! செப்டம்பர் 7ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு!!

 
நீட்


நீட் தேர்வு முடிவுகள்  செப்டம்பர் மாதம் 7ம் தேதி வெளியிடப்படும் என்று நீட் தேர்வு முகமை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தேர்வர்கள் முடிவுகளை எதிர்நோக்கி ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.கடந்த சில ஆண்டுகளாக இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வுகளின் அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள் மட்டுமின்றி ஆயுர்வேதா, சித்தா படிப்புகள், யுனானி, ஹோமியோபதி ஆகிய படிப்புகளுக்கும் நீட் தேர்வு நடத்தப்பட்டது.  

நீட்
அதன்படி கடந்த மாதம் 17ம் தேதி இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது. இந்த தேர்வுக்கு நாடு முழுவதும் 18 லட்சத்து 72 ஆயிரத்து 343 பேர் விண்ணப்பித்தனர். பி.டி.எஸ். எனப்படும் பல் மருத்துவம் மற்றும் எம்.பி.பி.எஸ். எனப்படும் இளங்கலை மருத்துவ படிப்புகள் இரண்டிற்குமான நீட் தேர்வை மொத்தம் 17 லட்சத்து 78 ஆயிரத்து 725 பேர் எழுதியிருந்தனர். இந்த தேர்வு நாடு முழுவதும் மொத்தம் 543 நகரங்களில் மொத்தம் 3,800 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு நடத்தப்பட்டது.


இதன் முடிவுகள் வெளியிடப்படும் தேதி குறித்து நீட் தேர்வு முகமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘‘இளங்கலை மருத்துவ படிப்புகளுக்காக நடத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகள் வரும் செப்டம்பர் 7-ந் தேதி வெளியாகும்’’ என்று தெரிவித்துள்ளது. மேலும் குறியீட்டு விடைத்தாள் வரும் 30-ம்தேதி வெளியாகும் என்றும் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது. நீட் தேர்வுகளின் முடிவுகளின் அடிப்படையிலேயே தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் நீட் தேர்வு கூடாது! ஆட்டத்தை ஆரம்பித்த திமுக! மத்திய அரசிடம் அமைச்சர் பொன்முடி வலியுறுத்தல்!
நீட்தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். முடிவுகளின் அடிப்படையில் அவர்கள் தங்களுக்கான படிப்புகளை தேர்வு செய்யவும் மிகவும் ஆவலுடன் உள்ளனர்.நீட் தேர்வுகள் இந்தியாவில் உள்ள நகரங்கள் மட்டுமின்றி வெளிநாட்டில் உள்ள மாணவர்கள் இந்தியாவில் மருத்துவம் படிப்பதற்காக கொழும்பு, காத்மாண்டு, பாங்காக், கோலாலம்பூர், சிங்கப்பூர், துபாய், அபுதாபி, மஸ்கட், ஷார்ஜா, குவைத், தோஹா, மனாமா, ரியாத், லாகோஸ் நகரங்களிலும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web