அடி தூள்.. உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் இன்று வெளியீடு

 
வது அட்டவணையில் இடம் பெற்றுள்ள 22 மொழிகளிலும் தீர்ப்புகளின் மொழியாக்கம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது, என்று தெரிவித்தார்.

உச்சநீதிமன்ற தீர்ப்புகளை தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்திருந்தார். மேலும் அதற்கான குழுவையும் அவர் நியமித்து உத்தரவிட்டடார்.

இதற்கிடையே உச்சநீதிமன்றத்தில் நேற்று நடந்த வழக்கு ஒன்றின் விசாரணையின் போது, தலைமை நீதிபதி பேசுகையில், எலக்ட்ரானிக்ஸ் உச்சநீதிமன்றம் ரிப்போர்ட் (இ.எஸ்.சி.ஆர்.) திட்டத்தின் கீழ் உச்சநீதிமன்றத்தின் 34 ஆயிரம் தீர்ப்புகள் இணையத்தில் பதிவேற்றப்பட்டு உள்ளன. 

tamil

அவற்றில் இந்தியில் 1,091 தீர்ப்புகளும், ஒடியாவில் 21, மராத்தியில் 14, அசாமியில் 4, கரோவில் 1, கன்னடத்தில் 17, காசியில் 1, மலையாளத்தில் 29, நேபாளியில் 3, பஞ்சாபியில் 4, தமிழில் 52, தெலுங்கில் 28, உருதுவில் 3 என்ற எண்ணிக்கையில் தீர்ப்புகள் குடியரசு தினமான இன்று (வியாழக்கிழமை) மொழியாக்கம் செய்யப்பட்டு உச்சநீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அரசியலமைப்பு சட்டத்தின் 8-

வது அட்டவணையில் இடம் பெற்றுள்ள 22 மொழிகளிலும் தீர்ப்புகளின் மொழியாக்கம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது, என்று தெரிவித்தார்.

tamil

அதன்படி இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தமிழில் வெளியிடப்பட உள்ளன. இதன்மூலம் இனி வரும் காலங்களிலும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் தமிழிலில் வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இனி உச்சநீதிமன்றத்தில் வெளியாகும் முழுமையான தீர்ப்புகளை தமிழில் எளிதாக தெரிந்துகொள்ளலாம்.

From around the web