அட்ராசக்க…! சென்னையில் ஓட்டுனர் இல்லாமல் மெட்ரோ ரெயில்…

 
சூப்பர்! விரைவில் மதுரையில் மெட்ரோ ரயில்!

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சித்திக் முன்னிலையில், ஓட்டுனர் இல்லாம மெட்ரோ ரெயில் தயாரிப்பிற்கான 946 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி மற்றும் திருவாளர் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்தின் வர்த்தக இயக்குனர் ராஜீவ் ஜோய்சர் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இன்று இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் சேவை!

இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஆளில்லா முதல் மெட்ரோ ரெயில் 2024 - ஆம் ஆண்டில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் . அதை தொடர்ந்து ஓட்டுநர் இல்லாத ரெயில் இயக்கத்திற்கான சோதனைகள் நடத்தப்படும்.  முதலில் சென்னை அண்ணாசாலை நந்தனத்தில் அமைந்துள்ள மெட்ரோ தலைமை அலுவலகத்தில் ஓட்டுனர் இல்லா மெட்ரோ ரெயில் தயாரிப்பிற்கான 946 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தானது.

மெட்ரோ ரயில்

சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தில் இரண்டில் ஓட்டுனர் இல்லாமல் இயக்கப்படும். மேலும் 3 பெட்டிகளை கொண்ட 26 மெட்ரோ ரெயில்களை உருவாக்க சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மெட்ரோ நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு பயணிகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

From around the web