காங்கிரஸ் பிரமுகர் மகன் அட்டூழியம்…உணவு வர தாமதமானதால் ஓட்டலுக்கு தீ வைத்த அதிர்ச்சி சம்பவம்…

 
கர்நாடகா

தமிழகத்தில் சில அரசியல் கட்சி பிரமுகர்கள் தங்களது செல்வாக்கை தவறாக பயன்படுத்தி அடிதடி போன்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். அதிலும் ஓட்டலுக்கு செல்லும் பிரமுகர்கள், ஆர்டர் செய்த உணவை ஊழியர்கள் கொண்டு வர சற்று தாமதமானால் ஓட்டலையே அடித்து நொறுக்கி விடுகின்றனர். அப்படி ஒரு சம்பவம் தான் கர்நாடகா அருகே நிகழ்ந்துள்ளது.

கர்நாடகா

கர்நாடகா மாநிலம், பெங்களூருவை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ராமச்சந்திரப்பாவின் மகன் தனுஷ் . இவர் தனது பிறந்த நாளை கொண்டாட, தனது நண்பர்கள் 20பேருடன் ஆனேக்கல் பகுதியில் உள்ள வில்லேஜ் ரெஸ்டாரெண்ட்  ஓட்டலுக்கு சென்றுள்ளார். அப்போது ஆர்டர் கொடுத்த உணவு வழங்க தாமதமானதால், தனுஷ் மற்றும் அவரது நண்பர்கள் ஓட்டல் ஊழியர்களை தாக்கி உள்ளனர். மேலும் பெண்கள் உள்ளிட்டோரையும் தாக்கி மேஜை உள்ளிட்டவற்றிற்கு தீ வைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடகா

படுகாயமடைந்த ஓட்டல் ஊழியர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இதுத் தொடர்பாக ஓட்டர் உரிமையாளர் ஆனேக்கல் காவல் நிலையத்தில் காங்கிரஸ் நிர்வாகி மகன் மீது புகார் அளித்துள்ளார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலிசார் விசாரித்து வருகின்றனர்.

 

From around the web