பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல்! தமிழகத்தில் பிரபல வங்கியில் கொள்ளை முயற்சி!

 
இந்தியன் வங்கி

தமிழகத்தில் சமீப காலங்களாக கொலை, கொள்ளை போன்றவைகளை அதிகரித்து வருகின்றன. பயங்கர ஆயுதங்களுடன் காவலாளியைத் தாக்கி, வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற கும்பல், சுவற்றில் துளையிட முடியாமல் திரும்பி சென்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் சாலாவக்கம் அருகே இந்தியன் வங்கி ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலையில், வங்கிக்கு மர்ம நபர்கள் சிலர்  கடப்பாறை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை எடுத்துக் கொண்டு கொள்ளையடிக்கும் நோக்கத்தில் சென்றுள்ளனர். 

ஆபேல்

அண்ணாநகர் முதல் தெருவைச் சேர்ந்த ஆபேல் (65) என்பவர் அந்த வங்கியில் இரவு நேர பாதுகாவலராக பணியாற்றி வருகிறார். பணியில் இருந்த ஆபேலை மர்ம நபர்கள் திடீரென்று  தாக்கியுள்ளனர். கட்டையால் சரமாரியாக தாக்கப்பட்ட ஆபேலை அவர்கள் அதன் பின்னர், கயிற்றால் கட்டி அருகே உள்ள கழிவறைக்குள் அடைத்து வைத்துள்ளனர்.

அதன் பின்னர் வங்கியின் பின்புற சுவரை இடித்து உள்ளே சென்று கொள்ளையடிக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் எளிதில் வங்கி சுவரை துளையிட முடியாமல் போனது. இதனால் கொள்ளை முயற்சி பலனளிக்காமல் போகவே வெறும் கையுடன் மர்ம நபர்கள் திரும்பி சென்றுள்ளனர். சிறிது நேரம் கழித்து கழிவறையில் அடைக்கப்பட்டிருந்த ஆபேலை, சப்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் மீட்டு செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

கொள்ளை

இது குறித்து தகவல் அறிந்த சாலவாக்கம் போலீசார், அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுவரில் துளையிட முடியாமல் போனதால் கொள்ளை சம்பவம் முறியடிக்கப்பட்டு லட்சக்கணக்கிலான பணமும், நகைகளும் தப்பியது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web