போலீஸ் நிலையத்தில் தீக்குளிக்க முயற்சி!! பகீர் பிண்ணனி!!

 
போலீஸ்

 நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.பள்ளிபாளையம் ஒட்டன்மெத்தை பகுதியில் வசித்து வருபவர் முருகன் (வயது 48). இவர் ஜவுளி நிறுவனங்களுக்கு வெள்ளை பெட்ரோல் வழங்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். முருகன் தொழில் ரீதியாக வெடியரசம்பாளையம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கு வெள்ளை பெட்ரோல் வழங்கி வந்துள்ளார். இவர்களுக்கு இடையிலான வியாபாரத்தில் ரூ.5 லட்சம் வரை முருகன் மோசடி செய்தது குறித்து சீனிவாசனுக்கு தெரிய வந்துள்ளது.

போலீஸ்

இதனை கண்டுபிடித்த முருகன் மீது ஆத்திரமடைந்து தன்னிடம் இருந்து ஏமாற்றிய ரூ.5 லட்சம் பணத்தை கேட்டு வந்துள்ளார். இதற்கு முருகன் மறுப்பு தெரிவித்துள்ளார்.இதைத்தொடர்ந்து முருகனின் வீடு மற்றும் வீட்டு மனைகளை அபகரிக்க சீனிவாசன் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதில் விரக்தியடைந்த முருகன் பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்துக்கு நேற்று தனது தாய் சாவித்திரி, தங்கை கருணாதேவி ஆகியோருடன் வந்தார். 

நீட் தேர்வில் முதலிடம்! நாமக்கல் மாவட்டம் அசத்தல்!
தாங்கள் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை 3 பேரும் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், 3 பேரையும் தடுத்து நிறுத்தியதால் பெரிய அசம்பாவிதம் நடக்காமல் போனது.பின்னர் போலீஸ் அதிகாரிகள் முருகன் உள்ளிட்ட 3 பேரிடமும் விசாரணை நடத்தினர். பின்னர் சீனிவாசன் தரப்பினரை போலீஸ் நிலையம் வரவழைத்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.போலீஸ் நிலையத்திற்கு சென்ற 3 பேர் திடீரென்று தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலை எந்த பிரச்சினைக்கும் தீர்வு இல்லை என்பதை மக்கள் புரிந்து செயல்பட வேண்டும்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web