BABY ON BOARD.. பொது நிகழ்ச்சியில் கலக்கிய நடிகை! குவியும் வாழ்த்துக்கள்!
கார் போன்ற வாகனங்களில், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் பயணிக்கும் போது, வாகனத்துக்குப் பின்னால், பேபி ஆன் போர்ட்’ என்று எழுதி இருப்பார்கள். பார்த்து கவனமாக உரசாமல், அதிக ஹார்ன் சப்தம் எழுப்பி பயமுறுத்தாமல் செல்லுங்கள் என்று அர்த்தம்.
இந்நிலையில், சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள கர்ப்பிணியான நடிகை ஆலியாட் வந்திருந்த போது, அவர் அணிந்திருந்த உடை தான் மொத்த நிகழ்ச்சியின் அட்ராக்ஷனே. முதுகு பக்கம், பேபி ஆன் போர்ட் என்று கம்பீரமாக நடிகை இமேஜை எல்லாம் தூக்கி தூர எறிந்து விட்டு வலம் வந்தார். நம்ம தமிழ் நடிகைகள், கல்யாணத்தையே மறைத்துக் கொண்டிருந்து, கர்ப்பமானதைச் சொல்லக் கூச்சப்பட்டு வெளியே வராமலே இருக்க, இதெல்லாம் அனுபவிக்கணும் தெரியுமா? ஐயம் ப்ரவுட் டூ பி எ மாம்’ என்று கலகலவென சிரிக்கிறார் நடிகை ஆலியா பட்.
இந்தியில் மிகப் பெரும் பொருட்செலவில் உருவாகி இருக்கும் ‘பிரமாஸ்த்ரா’ திரைப்படம் தமிழிலும் ‘பிரம்மாஸ்திரம்’ என்கிற பெயரில் வெளியாக உள்ளது. இந்து கடவுளான சிவனின் அவதாரமாக ரன்பீர் கபூர் நடித்துள்ள இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் கிராஃபிக்ஸ் மற்றும் தொழில்நுட்ப செலவுகளால் படத்தின் பட்ஜெட் ரூ.400 கோடியைத் தாண்டி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மூன்று பாகங்களாக வெளியாகவுள்ள ’பிரம்மாஸ்திரம்’ படத்தின் முதல் பாகம் வருகிற செப்.9ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இந்தியா முழுவதும் வெளியாக உள்ளது. ஏற்கனவே, பாலிவுட் படங்கள் மிகப் பெரிய புறக்கணிப்பைச் சந்தித்து வருகிற நிலையில் ரூ. 400 கோடி பட்ஜெட்டில் உருவான ‘பிரம்மாஸ்திரம்’ படத்திற்கு என்ன நடக்கப் போகிறது? என ரசிகர்கள் இணையத்தில் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
இந்தி திரையுலகின் பிரபல நடிகரான ரன்வீர் கபூர் மற்றும் அவரின் காதல் மனைவி நடிகை ஆலியா பட் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் பிரம்மாஸ்திரா. இப்படத்தை அயன் முகர்ஜி இயக்கியுள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இந்நிலையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற பிரம்மாஸ்திரா திரைப்படத்தின் பிரமோஷனில் கலந்து கொண்ட ஆலியா பட், பிங்க் நிற ஆடையணிந்து வந்தார். அந்த ஆடையில், குழந்தை உருவாகி உள்ளது என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. இதன் மூலமாக தான் கருவுற்று இருப்பதை அவர் ரசிகர்களுக்கு வெளியிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகவே ரசிகர்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை நடிகை ஆலியா பட்டுக்குத் தெரிவித்து வருகின்றனர். அத்துடன் படப்பிடிப்பின் போது ஒருவரை ஒருவர் காதலிக்க தொடங்கி, 5 வருட பழக்கத்துக்கு பின் கடந்த ஏப்ரலில் இருவரும் திருமணம் செய்து கொண்டு தற்போது கருவுற்று இருப்பதை அறிவித்துள்ளார். அத்துடன் படப்பிடிப்பின் போது ஒருவரை ஒருவர் காதலிக்க தொடங்கி, 5 வருட பழக்கத்துக்கு பின் கடந்த ஏப்ரலில் இருவரும் திருமணம் செய்து கொண்டு தற்போது கருவுற்று இருப்பதை அறிவித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!