பி.ஆர்க் சேர்க்கை மறுப்பு! மாணவிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு!

 
நீதிமன்றம்
பி.ஆர்க் சேர்க்கை மறுக்கப்பட்ட மாணவி அம்ருதா, தொடர்ந்திருந்த வழக்கில், மாணவிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பி. ஆர்க் படிப்பிற்கு நாட்டா தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம் என ஆர்கிடெக்சர் கவுன்சில் 2008ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இருப்பினும் பல மாநிலங்கள், நாட்டா தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம் என கூறி வந்தன. இந்நிலையில், ஆர்கிடெக்சர் கவுன்சில் 2017, ஜூன் 15ம் தேதி வெளியிட்ட விளக்க சுற்றறிக்கையில், நாட்டா தேர்வு கட்டாயம் இல்லை என்றும், ஜேஇஇ உள்ளிட்ட தகுதி தேர்வுகளின் அடிப்படையில் பி.ஆர்க். படிப்பில் சேர்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

NATA

இந்நிலையில் 2017-18ம் கல்வியாண்டில் பி.ஆர்க். மாணவர் சேர்க்கைக்கான விளக்க குறிப்புகளில் நாட்டா தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டதின் காரணமாக ஜே.இ.இ. தேர்வில் 390 மதிப்பெண்களுக்கு 226 எடுத்த அம்ருதா என்கிற மாணவி பி.ஆர்க். படிப்பிற்கு அளித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நாட்டா தேர்வு கட்டாயமில்லை என்ற பிறகும், விண்ணப்பத்தை நிராகரித்ததால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு இழப்பீடு வழங்க 2017ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. கடந்த 2017ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டு, நிலுவையில் இருந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுப்ரமணியன், நாட்டா தேவையில்லை என்று 2017ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி ஆர்கிடெக்சர் கவுன்சில் அறிவிப்பு வெளியிட்ட நிலையில், நாட்டா தகுதி தேர்வு அவசியம் என ஜூன் 25ம் தேதி மாணவர் சேர்க்கை செயலாளர் அறிவிப்பு வெளியிட்டது ஆர்கிடெக்சர் கவுன்சில் உத்தரவை மீறும் வகையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஆர்கிடெக்சர் கவுன்சில் அறிவிப்பு வெளியிடாவிட்டாலும் கூட, நாட்டா கட்டாயம் என்ற அறிவிப்புக்கு 2008ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதையும், ஜே.இ.இ. உள்ளிட்ட தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம் என்ற தமிழக அரசு உத்தரவிட்டதையும் சுட்டிக் காட்டினார்.

NATA

தொடர்ந்து நாட்டா தேர்வில் தகுதி பெறவில்லை என கூறி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு, 10 லட்சம் ரூபாய் இழப்பீடும், ஒரு லட்ச ரூபாய் வழக்கு செலவு தொகையும் சேர்த்து 4 வாரத்தில் வழங்க உத்தரவிட்டார்.

கல்வியின் கொள்கைகளை முடிவு செய்யும் பொறுப்பில் இருக்கும் பொறுப்பற்ற கல்வியாளர்கள் மற்றும் அதிகாரிகளால், நம் இளைஞர்களின் வாழ்வு எப்படி பாதுகாப்பற்றதாக உள்ளது என்பதை இந்த வழக்கு படம்பிடித்து காட்டுவதாக நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், கல்வி என்பது வாழ்வாதாரத்திற்கு தேவையான தகுதியை வழங்குவதற்கு மட்டும் அல்ல, சமூகத்தால் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் ஒரு நல்ல மனிதனை உருவாக்குவதும் தான் என குறிப்பிட்டார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web