பிசிசிஐ அதிரடி!! வெளிநாட்டு டி20 போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்க தடை!!

 
பிசிசிஐ

கடந்த 2008-ல் துவங்கப்பட்ட ஐபிஎல் டி20 தொடர் கடந்த 15 வருடங்களில் யாருமே எதிர்பாராத பிரம்மாண்ட வளர்ச்சியைக் கண்டு உலகின் நம்பர் ஒன் தொடராக விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால் இந்த போட்டிக்கு வர்த்தக ரீதியில் மிகப் பெரிய வெற்றி கிடைத்தது. இதன் வளர்ச்சியை பார்த்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் உட்பட வெளிநாட்டு வாரியங்கள் தங்களது நாடுகளில் பிரத்தியேக டி20 தொடரை நடத்தினாலும் அவற்றால் ஐபிஎல் உச்சத்தை எட்ட முடியவில்லை.

பிசிசிஐ

இந்நிலையில், இந்த ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள துபாய் மற்றும் தென் ஆப்பிரிக்க டி20 தொடர்கள் வரும் 2023 ஜனவரியில் நடைபெற உள்ளது. அதில் ஐபிஎல் தொடரை போலவே நிறைய வெளிநாட்டு வீரர்களை பங்கேற்க வைப்பதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், ஜோகனஸ்பர்க்கை அடிப்படையாக கொண்டு உதயமாகும் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வாங்கியுள்ளது. அதேபோல் கேப்டவுன் அணி, மும்பை இந்தியன்சுக்கும், டர்பன் அணி லக்னோ சூப்பர் ஜெயன்ட்சுக்கும், செயின்ட் ஜார்ஜ் பார்க் அணி ஐதராபாத் சன்ரைசர்சுக்கும், பார்ல் அணி ராஜஸ்தான் ராயல்சுக்கும், பிரிட்டோரியா அணி டெல்லி கேப்பிட்டல்சும் வாங்கியுள்ளது. 

இந்நிலையில் எந்த ஒரு இந்திய வீரரும் அவர்களின் அனைத்து விதமான கிரிக்கெட்டுகளில் இருந்தும் ஓய்வு பெறுவதற்கு முன்னர் எந்த ஒரு வெளிநாட்டு டி20 லீக் தொடர்களிலும் பங்கேற்கவோ அல்லது வழிகாட்டவோ கூடாது என்று பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

Banned
அதன்படி ஒப்பந்தம் செய்யப்பட்ட அல்லது ஓய்வுபெற்ற மற்றும் ஐபிஎல்லில் விளையாடும் எந்த இந்திய வீரரும், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற உள்ள டி20 லீக் தொடர்களில் இடம்பெற இந்திய கிரிக்கெட் வாரியத்தால் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஐபிஎல்லில் விளையாடும் எவரும் இந்த வெளிநாட்டு லீக்குகளில் வழிகாட்டியாக கூட இருக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் பங்கேற்க விரும்பினால் அவர்கள் பிசிசிஐ உடனான அனைத்து உறவுகள் மற்றும் காண்ட்ராக்ட்டுகளை முறித்து கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web