BIG NEWS!! விநாயகர் சதுர்த்தி சிலை கரைப்பிற்கு வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு!!

 
விநாயகர்

ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தியில் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. நடப்பாண்டில் விநாயகர் சதுர்த்தி ஆகஸ்ட் 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் அனைத்து இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது. இவ்வாறு வழிபட்ட விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்சென்று கடல், ஆறு, குளங்களில் கரைத்து வருகின்றனர். 

விநாயகர்
இந்நிலையில் தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. இது குறித்து தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களுக்கு மிகப்பெரிய கடமை இருப்பதை உணர வேண்டும். இவைகளே குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாட வேண்டும்.

விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வழிகாட்டுதல்களின்படி www.tnpcb.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில்  குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்கவேண்டும். 


களி மண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் 'பிளாஸ்டர் ஆப் பாரிஸ்', பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதி 
இது தவிர சிலை  ஆபரணங்கள் தயாரிப்பிற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் பயன்படுத்தலாம். 
 சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தலாம். 
ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தொர்மாகோல் பொருட்களை பயன்படுத்த அனுமதி கிடையாது. 

விநாயகர்
அதே போல்  சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணெய் வண்ணப்பூச்சுகளை பயன்படுத்த அனுமதி கிடையாது. 
சிலைகளின் மீது 'எனாமல்' மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது. 
மாற்றாக சுற்றுச்சூழலுகு உகந்த நீர் சார்ந்த, மக்கக்கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தவேண்டும். 
மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும்  கரைக்க அனுமதி
விநாயகர் சதுர்த்தி விழாவினை சூற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாட வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரிடம் அணுகி பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web